வவுனியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் விபத்துகளால் 58 பேர் பலி
வவுனியாவில் 2021ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பல்வேறு விபத்து சம்பவங்களால் 58 பேர் பலியாகியுள்ளனர்.
விபத்துகள் தொடர்பான தகவல்களை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிடமிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்பட்டதைத் தொடர்ந்து, அவை வெளியிடப்பட்டுள்ளன.
இத்தகவல்களின்படி, இந்த ஆண்டு மட்டும் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், விபத்துகளால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது.
மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் 18 வயதுக்குக் குறைந்தவர்கள் இவ்விபத்துகளால் 8 பேர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் விபத்துகளால் 58 பேர் பலி
Reviewed by Vijithan
on
October 25, 2025
Rating:
Reviewed by Vijithan
on
October 25, 2025
Rating:


No comments:
Post a Comment