அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் பேசாலையில் இடம் பெற்ற இரத்ததான முகாம்.

 மன்னார் பேசாலை வெற்றி சிறகுகள் அமைப்பின்  ஏற்பாட்டில்,பேசாலை பிரதேச வைத்தியசாலையில் இன்று (25) சனிக்கிழமை காலை இரத்ததான முகாம் இடம் பெற்றது.


இன்று(25) காலை 9 மணி தொடக்கம்,மாலை 4 மணி வரை குறித்த இரத்ததான முகாம் இடம் பெற்றது.


மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வேண்டுகோளுக்கு அமைவாகவும்,மாவட்ட  வைத்தியசாலை இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையிலும் குறித்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.


குறித்த இரத்ததான முகாமில் பேசாலை பகுதியைச் சேர்ந்த இளைஞர்,யுவதிகள் உள்ளடங்களாக சுமார் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.


குறிப்பாக பேசாலை பகுதியை சேர்ந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினரும் இரத்த தானம் செய்தனர்.


மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியின் உதவியுடன் வைத்தியர்கள் இணைந்து குறித்த இரத்ததான முகாமை சிறப்பாக முன்னெடுத்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.




மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் பேசாலையில் இடம் பெற்ற இரத்ததான முகாம். Reviewed by Vijithan on October 25, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.