அண்மைய செய்திகள்

recent
-

கொழும்பில் இருந்து யாழ் வந்த மாசி சாம்பல் போத்தலில் போதை மாத்திரை

  மாசி சாம்பல் போத்தல்களுக்கு மறைத்து வைத்து போதை மாத்திரைகளை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் கடத்தி வந்த மூவரை நேற்றைய தினம் (25) யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர்.


யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் போதை மாத்திரை விற்பனை தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , மூவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



கடைகளுக்கு விற்பனை


அதன் போது குறித்த நபர்கள் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு மாசி கருவாட்டு சாம்பல் போத்தல்களை எடுத்து வந்து கடைகளுக்கு விற்பனை செய்து வந்தமை தெரியவந்துள்ளது.




அவ்வாறு கொழும்பில் இருந்து மாசி சாம்பல் போத்தல்களை எடுத்து வரும் போது அவற்றுக்குள் சூட்சுமமான முறையில் போதை மாத்திரைகளையும் கடத்தி வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


கைது செய்யப்பட்ட மூவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 





கொழும்பில் இருந்து யாழ் வந்த மாசி சாம்பல் போத்தலில் போதை மாத்திரை Reviewed by Vijithan on November 26, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.