இலங்கையில் 85 இடங்களுக்குப் பலத்த பாதுகாப்பு!
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, இலங்கையில் 85 இடங்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (04) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ:
"வெளிநாட்டுத் தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தூதரகங்கள், உயர்ஸ்தானிகராலயங்கள் மற்றும் அவர்களின் உத்தியோகபூர்வ வாசஸ்தலங்கள் என 85 இடங்களுக்கு இவ்வாறு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது."
Reviewed by Vijithan
on
March 04, 2026
Rating:


No comments:
Post a Comment