தமிழீழப் போராட்ட வரலாற்றில் கடற்புலிகளின் பங்களிப்பானது எத்தகையது- இங்கிலாந்தில் வெளியீடு செய்யப்பட்ட 'கடலில் கரைந்து விட்ட காலங்களும் வரலாற்றில் தடம் பதித்து விட்ட நினைவுகளும்' எனும் நூல்
"கடலில் கரைந்து விட்ட காலங்களும் வரலாற்றில் தடம் பதித்து விட்ட நினைவுகளும்" எனும் நூலின் பாகம் ஒன்று நேற்றைய தினம் (01) இங்கிலாந்தின் வெம்பிளி (Wembley) நகரில் வெளியிடப்பட்டது.
இந்நூலானது கடலின் மடியின் குழுமத்தினரால் தமிழீழப் போராட்ட வரலாற்றில் கடற்புலிகளின் பங்களிப்பானது எத்தகையது என்பதை சந்ததியினருக்கு கடத்தும் நோக்கிலும், அவர்களது சாதனைகளை எடுத்து இயம்பும் நோக்கிலும் உருவாக்கப்பட்டுள்ளது.
கடற்புலிகளால் போராட்ட காலங்களில் இத்தகைய நடவடிக்கைகள் கடற்பரப்பில் நிகழ்த்தப்பட்டது, அவர்கள் இந்த இக்கட்டான சூழ் நிலைகளில் எவ்வாறான சூழ்நிலையில் மக்களுக்காக தங்களது செயல்பாடுகளையும் போராட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்கள் என்ற உண்மையான நிகழ்வுகளை நினைத்துப் பார்க்கும் ஓர் ஆவணப் புத்தகமாக இந்நூலானது ஆவணங்களை உள்ளடக்கியதாக உள்ளது.
Reviewed by Vijithan
on
March 02, 2026
Rating:


No comments:
Post a Comment