இடி மின்னலுடன் கூடிய மழை: வௌியான எச்சரிக்கை
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் இன்று (13) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடிமின்னலுடன் கூடிய மழையின் போது இப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைத் தவிர்ப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
இடி மின்னலுடன் கூடிய மழை: வௌியான எச்சரிக்கை
Reviewed by Vijithan
on
April 13, 2026
Rating:
Reviewed by Vijithan
on
April 13, 2026
Rating:


No comments:
Post a Comment