அண்மைய செய்திகள்

recent
-

4 மாகாணங்களில் எலிக் காய்ச்சல், தொற்று நோய்கள் பரவும் அபாயம்

 சீரற்ற காலனிலையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு அபாயத்தை தொடர்ந்து மேல், தென், மத்திய, மற்றும் சப்ரகமுவ ஆகிய 4 மாகாணங்களில் வயிற்றுப்போக்கு மற்றும் எலிக் காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


இது குறித்து அச்சங்கத்தின் பிரதான செயலாளர் சமில் முத்துகுட புதன்கிழமை (05) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், அசுத்தமான நீரின் ஊடாக எலி காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதால் அதனை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.




வயிற்றுப்போக்கு மஞ்சள் காமாலை தோல் நோய்கள் டெங்கு 


அருகில் உள்ள சுகாதார பரிசோதகர் அல்லது சுகாதார .வைத்திய அதிகாரி காரியாலயத்தின் ஊடாக இலவசமாக மருந்துகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



மேலும், வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை, தோல் நோய்கள், டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்களுக்கான அறிகுறிகள் தென்பட்டால்   உடனடியாக அருகில் உள்ள அரச வைத்தியசாலை அல்லது அங்கீகரிக்கப்பட்ட வைத்தியரிடமிருந்து சிகிச்சைகளையும் மருத்துவ ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.



மேலும், அசுத்தமான நீரில் குழந்தைகளை விளையாடச் செய்வது, நீராடுவது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதைத் தவிர்க்குமாறும் குறிப்பிட்டார். 





4 மாகாணங்களில் எலிக் காய்ச்சல், தொற்று நோய்கள் பரவும் அபாயம் Reviewed by Vijithan on August 05, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.