முதலமைச்சர் விஜய் தலைமையில் சுதந்திர தின கொண்டாட்டம்; முதல் வரிசையில் நடிகை திரிஷா
இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இன்று (15) நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ் நாடு முதலமைச்சர் விஜய் முதன்முறையாக தேசியக்கொடியை ஏற்றினார்
சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியேற்றுவதற்காக முதலமைச்சர் விஜய் வருகை தந்தார்.
முதலமைச்சர் விஜயை வரவேற்ற தலைமைச் செயலாளர் அதிகாரிகளை அறிமுகம் செய்து வைத்தார்.
புனித ஜார்ஜ் கோட்டையில் பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ஜோசப் விஜய் ஏற்றார்.
முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு முப்படை மற்றும் சிறப்பு பொலிஸ் படை உள்ளிட்ட படையினர் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.
திறந்தவெளி வாகனத்தில் சென்று பொலிஸாரின் அணிவகுப்பினை முதலமைச்சர் விஜய் பார்வையிட்டார்.
பின்னர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய், செயின்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதன்முறையாக தேசியக்கொடியை ஏற்றினார்.
இந்தநிலையில், சுதந்திர தின நிகழ்வில் நடிகை திரிஷா முதல் வரிசையில் நடிகை திரிஷா,உட்பட முதலமைச்சரின் பெற்றோர்கலும் அமர் ந் துள்ள புகைப்படம் சமூக வலைத்தலங்களில் வெலியாகியுள்ளது.
இது ஒரு அரசு விழா.. இந்த விழாவில் திரிஷாவுக்கு என்ன வேலை? அவர் எதற்காக இதில் கலந்து கொள்கிறார்? என திமுகவினரும், நாம் தமிழர் கட்சியினரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
Reviewed by Vijithan
on
August 15, 2026
Rating:


No comments:
Post a Comment