அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பொது வைத்தியசாலையில் இடம் பெறும் இரத்ததான நிகழ்வில் இரத்ததானம் செய்யுங்கள்- DR.ஒஸ்மன் டெனி

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் எதிர் வரும் சனிக்கிழமை (11) காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரை மன்னார் மாவட்ட மக்கள் இரத்த தானம் வழங்க முடியும் என மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஒஸ்மன் டெனி தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ் நிலையினை கருத்தில் கொண்டு தேசிய மட்டத்தில் இரத்த தான நிகழ்வு அரசாங்கத்தினால் நடை முறைப் படுத்தப்பட்டுள்ளது.

அதற்கு அமைவாக நாளை வெள்ளிக்கிழமை (10) காலை 8 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை உத்தியோகஸ்தர்களினால் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு இடம் பெறவுள்ளது.

சனிக்கிழமை  11 ஆம் திகதி காலை 8 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை மன்னார் மாவட்ட மக்கள் இரத்ததானம் வழங்கி வைக்க முடியும்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் குறித்த இரத்ததானம் வழங்கும் நிகழ்வு இடம் பெறும்.குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கி வைக்குமாறு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஒஸ்மன் டெனி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மன்னார் பொது வைத்தியசாலையில் இடம் பெறும் இரத்ததான நிகழ்வில் இரத்ததானம் செய்யுங்கள்- DR.ஒஸ்மன் டெனி Reviewed by Author on May 09, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.