அண்மைய செய்திகள்

recent
-

சுட்டெரிக்கும் வெயில் ; இலங்கையின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

 இலங்கையின் பல பாகங்களில் இன்று (26) மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையானது 'எச்சரிக்கை' மட்டத்திற்கு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.




மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், அனுராதபுரம், மன்னார், வவுனியா மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் இந்த அதீத வெப்பம் உணரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




வளிமண்டலத்தின் ஈரப்பதம் மற்றும் நிலவும் அதிகபட்ச வெப்பநிலையை அடிப்படையாகக் கொண்டு இது கணக்கிடப்படுகிறது.


சாதாரண வெப்பநிலையை விடவும் நமது உடல் உண்மையாக உணரக்கூடிய வெப்பத்தையே இது குறிக்கின்றது.


நீண்ட நேரம் வெயிலில் இருப்பதோ அல்லது வெளிப்புற வேலைகளில் ஈடுபடுவதோ கடுமையான உடல் சோர்வை ஏற்படுத்தும்.


இவ்வாறான நிலையில் தொடர்ந்து இருப்பது தசைப்பிடிப்பு (Heat Cramps) போன்ற பாதிப்புகளுக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


பொதுமக்கள் போதியளவு நீர் அருந்தி உடலை எப்போதும் நீரேற்றத்துடன் வைத்திருக்குமாறும், தேவையற்ற கடினமான வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


குறிப்பாக முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பில் மேலதிக அவதானம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.





சுட்டெரிக்கும் வெயில் ; இலங்கையின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை Reviewed by Vijithan on March 26, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.