அண்மைய செய்திகள்

recent
-

தமிழ்ச் சோலைப் பள்ளிகளின் ஆசிரியை மரணமடைந்தார்......!!

பிரான்சில் தமிழ்ச்சோலைப் பள்ளிகளின் (நந்தியார் (nanterre), கொலம்பஸ்(colombes), சேர்ஜி (Cergy) ஆசிரியை இராசநாயகம் உதயமாலா (உதயா – வயது 53) அவர்கள் நேற்று (05.06.2020) வெள்ளிக்கிழமை சுகயீனம் காரணமாக மரணமடைந்துள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தாயாரான இவர் தாயகத்தில் சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும்
பிரான்ஸ் Saint-Germain-en-Laye இனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இவர், மிகுந்த தேசவிடுதலைப்பற்றுக் கொண்டவர், பிரான்சு தமிழ்ப்பெண்கள் அமைப்பில் உறுப்பினராகவும் பணியாற்றியவர்.

எமது தேசிய விளையாட்டுப்போட்டிகளில் , தேசிய நிகழ்வுகளில் அறிவிப்பாளராகவும் கடமையாற்றியவர். தமது பிள்ளைகளையும் அதன்பால் இணைய வைத்து பங்குகொள்ளச்செய்தவர். சிறந்த கலைஞரும், நாடக ஆக்கம், பட்டிமன்றம் போன்றவற்றிலும் தனது ஆற்றலை வெளிப்படுத்தியவர்.

அன்னாரின் பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினர்களுக்கு அனைத்து தமிழ்ச்சோலைகள் சார்பாகவும் தமிழ்ச்சோலை தலைமைப் பணியகம் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளது.





தமிழ்ச் சோலைப் பள்ளிகளின் ஆசிரியை மரணமடைந்தார்......!! Reviewed by Author on June 07, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.