அண்மைய செய்திகள்

recent
-

ஒன்பது மணிநேரம் நீடித்தது டயகம சிறுமியின் பிரேதப் பரிசோதனை

டயகம சிறுமியின் இரண்டாவது பிரேதப் பரிசோதனை இன்று முடிவடைந்துள்ளது.பிரேதப் பரிசோதனை ஒன்பது மணித்தியாலங்கள் நீடித்தது என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மூன்று மருத்துவ நிபுணர்கள் 9 மணித்தியாலங்கள் பிரேதப் பரிசோதனையை மேற்கொண்டனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சில காயங்கள் குறித்து ஆராய்வதற்காக நேற்று சிடி ஸ்கான் மேற்கொள்ளப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

மருத்துவ நிபுணர்கள் புதிய அறிக்கையை தயாரிப்பதற்காக உடலின் பல பாகங்களின் மாதிரிகளை பெற்றுக்கொண்டுள்ளனர். அனைத்து ஆய்வு அறிக்கைகள் கிடைத்ததும் மருத்துவகுழுவினர் தங்கள் முடிவை வெளியிடுவார்கள். அதுவரை உடல் போரதனை மருத்துவமனையிலேயே இருக்கும் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்




ஒன்பது மணிநேரம் நீடித்தது டயகம சிறுமியின் பிரேதப் பரிசோதனை Reviewed by Author on August 01, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.