அண்மைய செய்திகள்

recent
-

அறிவிப்பு வெளியாகி ஓரிரு நிமிடங்களில் நிரம்பிய மன்னார் மதுக்கடைகள்.

மதுபானசாலைகள் திறக்க இன்று முதல் அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில் மன்னார் முருங்கன் மற்றும் உயிலங்குளப் பகுதிகளில் கடும் வாகன நேரிசல் ஏற்பட்டுள்ளது. மதுபான சாலைகள் திறப்பதற்கான அறிவிப்பு வெளியாகி சற்று நேரத்தில் மதுக்கடைகளுக்கு முன்பாக பெருங்குடி மக்கள் நீண்ட வரிசையில் ஒன்றுகூடி காத்திருந்து தமக்குத் தேவையான குடிபான போத்தல்களை கொள்வனவு செய்தமையை காணக்கூடியதாக உள்ளது.

 அத்துடன் பெருங்குடி மக்கள் அனைவரும் 5000 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகளை கொண்டு வந்திருந்ததாக மதுபானசாலை நடத்துநர்களும் தெரிவிக்கின்றனர் மதுபான கொள்வனவுக்கு என நீண்ட வரிசைகளில் காத்திருந்து மது போத்தல்களை பெற்று செல்வதை அவதானிக்ககூடியதால உள்ளது குறிப்பாக முருங்கன் மதுபானசாலைக்கு முன்னால் சுமார் 100 மீட்டர் தூரம் வரை நீண்ட வரிசையில் இன்று மாலை தொடக்கம் மது பிரியர்கள் வரிசை காத்திருந்து மதுபானங்களை கொள்வனவு செய்வதமை குறிப்பிடதக்கது












அறிவிப்பு வெளியாகி ஓரிரு நிமிடங்களில் நிரம்பிய மன்னார் மதுக்கடைகள். Reviewed by Author on September 17, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.