அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் பாடசாலை மாணவர்களுக்கு 'பைஸர்' தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்.

மன்னார் மாவட்டத்தில் க.பொ.த உயர் தர பரிட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்களுக்கான 'பைஸர்' முதலாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இன்றைய தினம் வியாழக்கிழமை (21) காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. -மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தலைமையில், மன்னார்,நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில், தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் குறித்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இவ்வருடம் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு முதல் தடவை மற்றும் 2 வது தடவையாக தோற்றும் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசியான பைஸர் தடுப்பூசியின் முதலாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தும் நிலையங்களான பாடசாலைகளில் சுகாதார வைத்திய அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள், வைத்தியசாலை பணியாளர்கள் , இராணுவம் மற்றும் விமானப்படை ஆகியோரின் ஒத்துழைப்புடன் மன்னார் மாவட்டத்தில் உயர் தர பரிட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்களுக்கான பைஸர் முதலாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. -இதன் போது மாணவர்கள் ஆர்வத்துடன் சென்று தடுப்பூசியை பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
                 
                 








மன்னாரில் பாடசாலை மாணவர்களுக்கு 'பைஸர்' தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம். Reviewed by Author on October 21, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.