அண்மைய செய்திகள்

recent
-

டயகம ஆக்ரோயா ஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் கண்டெடுப்பு

டயகம ஆக்ரோயா ஆற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். டயகம 5ம் பிரிவை சேர்ந்த 53 வயதுடைய சாமிநாதன் தங்கேஸ்வரி என்பவரே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த ஆற்றில் பெண்ணொருவரின் சடலம் மிதப்பதைக் கண்ட பிரதேச மக்கள், உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த டயகம பொலிஸார், சடலத்தை கண்டெடுத்துள்ளனர். 

 குறித்த பெண் நீரில் அடித்துக் கொண்டு வந்து உயிரிழந்தாரா அல்லது ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது எவராவது கொலை செய்து ஆற்றில் எறிந்து சென்றார்களா என்பது தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மேலும், மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை டயகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
டயகம ஆக்ரோயா ஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் கண்டெடுப்பு Reviewed by Author on December 07, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.