அண்மைய செய்திகள்

recent
-

இன்றும் நாளையும் மின்சார துண்டிப்பு – இலங்கை மின்சார சபை

இன்றும் நாளையும் மாலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை நாளாந்தம் ஒரு மணி நேர மின்சார துண்டிப்பு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட பிரச்சினை தற்போது 75 விகிதம் சரி செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். 

 குறித்த மின்நிலையத்தில் உள்ள இரண்டாவது ஜெனரேட்டர் இன்னும் முழுமையாக சரி செய்யப்படவில்லை என்றும், அதற்கு மேலும் 2 நாட்கள் எடுக்கும் என்றும் அவர் கூறினார். ஆகவே இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் பல இடங்களில் குறித்த நேரத்திற்குள் ஒரு மணிநேர மின்சாரம் துண்டிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இன்றும் நாளையும் மின்சார துண்டிப்பு – இலங்கை மின்சார சபை Reviewed by Author on December 07, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.