அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் வாகனத்தில் திடீரென உயிரிழந்த இரு இளம் குடும்பஸ்தர்கள்.

மன்னாரில் திடீரென உயிரிழந்ததாக கருதப்படும் இரு இளம் குடும்பஸ்தர்களின் சடலங்கள் நேற்று திங்கட்கிழமை (30) மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் குறித்த இரு குடும்பஸ்தர்களின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது. மன்னாரில் இருந்து வாகனம் ஒன்றில் நேற்று திங்கட்கிழமை (30) இரவு நான்கு நபர்கள் கொழும்பு நோக்கி பயணித்த போது மன்னார் உயிலங்குளம் பகுதியில் வைத்து குறித்த பயணம் செய்த இரண்டு இளம் குடும்பஸ்தர் களுக்கும் திடீர் சுகயீனம் ஏற்பட்டது. இதன் போது உடனடியாக குறித்த வாகனம் மீண்டும் மன்னார் வைத்தியசாலைக்கு வந்த போது குறித்த இரு குடும்பஸ்தரும் வாகனத்தினுள்ளேயே உயிரிழந்தனர். 

 மேலும் குறித்த வாகனத்தில் வந்த இருவரும் சுகவீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அமைக்கப்பட்டனர். பேசாலையைச் சேர்ந்த எம்.பிரதீப் (வயது-26) மற்றும் காட்டாஸ் பத்திரியை சேர்ந்த எம்.மசூர் (வயது-35) ஆகிய இரு இளம் குடும்பத்திலே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். திடீர் சுகயீனமடைந்து மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கும் முன் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் உறுதி செய்துள்ளனர். 

 வாகனம் ஒன்றில் 4 பேர் கொழும்பு நோக்கிப் பயணித்த நிலையில் நோய்வாய்ப்பட்டதாக தெரிவித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் அவர்கள் உயிரிழந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது. தற்போது உயிரிழந்த குடும்பஸ்தர்களின் சடலங்கள் யாழ் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மேலும் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் இருவரை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்





.
மன்னாரில் வாகனத்தில் திடீரென உயிரிழந்த இரு இளம் குடும்பஸ்தர்கள். Reviewed by Author on May 31, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.