அண்மைய செய்திகள்

recent
-

யாழில் விபத்தில் சிக்கிய பாடசாலை அதிபர் உயிரிழப்பு !

யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவகச்சேரிப் பகுதியில் டிப்பர் வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்த பாடசாலை அதிபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் முல்லைத்தீவு முத்தையன் கட்டு வலதுகரை முத்துவிநாயகர் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர் கந்தையா சத்தியசீலன் என்பவரே இன்று உயிரிழந்துள்ளார். 

 நேற்றுமுன்தினம் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த நபரை எதிர் திசையில் தவறான பக்கத்தில் வந்த டிப்பர் வாகனம் மோதி தள்ளியது. ஏ - 09 நெடுஞ்சாலையில் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக மோட்டார் சைக்கிளை டிப்பர் வாகனம் மோதித் தள்ளியதால் விபத்து நிகழ்ந்திருந்தது. சம்பவத்தில் படுகாயம் அடைந்த அதிபர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்த நிலையில், இன்று அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த அதிபரின் மரணம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.


யாழில் விபத்தில் சிக்கிய பாடசாலை அதிபர் உயிரிழப்பு ! Reviewed by Author on May 27, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.