அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் இருந்து மேலும் 6 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அங்குள்ள மக்கள் வாழ வழியின்றி அண்டை நாடுகளான இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஆபத்தான முறையில் கடலில் பயணம் செய்து அகதிகளாக இடம் பெயர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் தலைமன்னாரில் இருந்து கிளிநொச்சி மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த இரு குடும்பத்தை சேர்ந்த 6 நபர்கள் படகு மூலம் இன்று புதன்கிழமை (27) அதிகாலை தனுஷ்கோடியை சென்றடைந்துள்ளனர். ஏற்கனவே 30 குடும்பங்களை சேர்ந்த 117 நபர்கள் அகதிகளாக மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தஞ்சம் அடைந்துள்ளனர். 

 இந்த நிலையில் இன்று தனுஷ்கோடி அடுத்த கம்பிபாடு பகுதியில் ஒரு குடும்பம், தனி நபர் ஒருவரை சேர்த்து 3 சிறுவர்கள் உட்பட 6 பேர் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும் தஞ்சம் அடைந்தவர்களை கடலோர காவல் குழும போலீசார் விசாரணைக்காக மண்டபம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மேலும் அகதிகளாக வந்தவர்களை மரைன் போலீசார் விசாரணை நடத்தி பின்னர் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட உள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை (26) இரவு 07.00 மணிக்கு தலைமன்னாரில் இருந்து குறித்த இரு குடும்பத்தை சேர்ந்த 6 நபர்கள் இலங்கை படகு மூலம் தனுஷ்கோடிக்கு பயணத்தை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.





இலங்கையில் இருந்து மேலும் 6 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம். Reviewed by Author on July 27, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.