மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள இராணுவ சோதனை சாவடியில் வைத்து அரசு பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட ஐஸ் போதைப் பொருள் மீட்பு.
இதன் போது குறித்த பேருந்தில் பதுக்கி வைக்கப்பட்ட சிறிய பொதியை சோதனையின் போது மீட்ட இராணுவத்தினர் குறித்த பொதியை சோதனை செய்தனர்.
இதன் போது குறித்த பொதியில் ஐஸ் ரக போதைப்பொருள் இருந்தமை கண்டு பிடிக்கப்பட்டது.
எனினும் எவரும் கைது செய்யப்படவில்லை.
பல இலட்சம் ரூபாய் பெறுமதியான 250 கிராம் எடை கொண்ட ஐஸ் ரக போதைப்பொருள் இவ்வாறு மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட ஐஸ் ரக போதைப்பொருள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள இராணுவ சோதனை சாவடியில் வைத்து அரசு பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட ஐஸ் போதைப் பொருள் மீட்பு.
Reviewed by Author
on
September 14, 2022
Rating:
No comments:
Post a Comment