அண்மைய செய்திகள்

recent
-

வடக்கு-கிழக்கு மக்களுக்கு அதிகார பரவலாக்கம் என்பது ஒரு ஜனநாயக உரிமையாகும்-சாவகச்சேரி,மகிழங்கேணி கிராமத்தில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் மக்கள் தெரிவிப்பு.

வடக்கு-கிழக்கு மக்களுக்கு அதிகார பரவலாக்கம் என்பது ஒரு ஜனநாயக உரிமையாகும் என யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சாவகச்சேரி பிர தேசத்தின் மகிழங்கேணி கிராமத்தில் இன்று வியாழக்கிழமை (15) காலை இடம்பெற்ற 100 நாட்கள் செயல் முனைவின் 46 வது நாள் கவனயீர்ப்பு போராட்டத்தின் போது கலந்து கொண்ட மக்கள் தெரிவித்துள்ளனர். 'கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்' என்னும் தொனிப்பொருளில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் முன்னெடுக்கப்படும் 100 நாட்கள் செயல்முனைவின் 46 வது நாள் கவனயீர்ப்பு போராட்டம் இன்று வியாழக்கிழமை (15) யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சாவகச்சேரி பிரதேசத்தின் மகிழங்கேணி கிராமத்தில் நடைபெற்றது. 

 இசை செயற்றிட்டத்தில் சாவகச்சேரி பிரதேச மக்கள், சிவில் சமூக அமைப்புக்கள், பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் விவசாய, மீனவ அமைப்புக்கள், என பலரும் கலந்து கொண்டு கௌரவமான அரசியல் தீர்வுக்கான கோரிக்கைகளை முன் வைத்தனர். இதன் போது நாங்கள் நாட்டை துண்டாடவோ தனி அரசோ கேட்கவில்லை இலங்கை நாட்டுக்குள் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வையே கேட்கிறோம், எமக்கு வேண்டும் எங்கள் நிலம், ஒன்று கூடுவது எமது உரிமை,வடக்கு கிழக்கு மக்களுக்கு அதிகார பகிர்வு என்பது ஒரு ஜனநாயக உரிமையாகும், போன்ற பதாகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது கலந்து கொண்ட மக்கள் குறித்த கோரிக்கைகளை முன் வைத்தனர்.






வடக்கு-கிழக்கு மக்களுக்கு அதிகார பரவலாக்கம் என்பது ஒரு ஜனநாயக உரிமையாகும்-சாவகச்சேரி,மகிழங்கேணி கிராமத்தில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் மக்கள் தெரிவிப்பு. Reviewed by Author on September 15, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.