அண்மைய செய்திகள்

recent
-

மரண அறிவித்தல்.....

b:if cond='data:blog.pageType == "item"'>

மன்னார் மாவட்டத்தில் சித்த வைத்திய துறையை வளர்ப்பதில் அர்பணித்த
வைத்திய கலாநிதி எஸ்.லோகநாதன்B.S.M.S&JP காலமானார்.

மன்னார் மாவட்டத்தில் சித்த வைத்திய துறையை வளர்த்து எடுப்பதில் பெரும் அரும்பாடுபட்டு வந்த திரு திருமதி செல்வக்கண்டு  மரகதம் தம்பதிகளின் புத்திரனான திருமதி பாமினி அவர்களின் கணவரும்
ராகுல் பிரவணன்,மதுரன்,கிசாலினி(அபர்ணா) அவர்களின் தந்தையுமான சித்த வைத்திய வைத்திய கலாநிதி எஸ்.லோகநாதன்B.S.M.S&JP நேற்று வியாழக் கிழமை (28.03.2019) தனது 58 வது வயதில் காலமானார்.

இவர் சம்பவம் அன்று காலை மன்னார் பொது வைத்தியசாலையில் சுகவீனம் காரணமாக சேர்க்கப்பட்ட நிலையிலேயே நேற்று நண்பகல் இறந்துள்ளார்.

இவர் மதுரை காமராஐர் பல்கலைக்கழகத்தில்  வைத்தியத்துறையில்
பட்டதாரியாகவும் மன்னார் மாவட்ட ஆயுர்வேத சங்கத்தின் பொருளாளராகவும் துரையம்மா அன்பகத்தின் போசகரும்
தமிழமுது நண்பர்கள் வட்டம் அமைப்பின் ஆலோசகரும்
ஐக்கிய மதங்களின் ஒன்றியம் மன்னார் உறுப்பினரும்
இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மன்னார் மாவட்ட கிளையின் நிர்வாக
உறுப்பினராகவும் மற்றும் மன்னார் மாவட்டத்தில்  பல முக்கிய அமைப்புக்ளில் உறுப்பினராக இருந்து பொதுப் பணிகளில் ஈடுபட்டு வந்தவர்.

அத்துடன் வறுமை கோட்டுக்குள் வாழும் மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகம் சென்றுள்ள மாணவர்கள் பலரின் கல்விக்கு நீண்ட காலமாக உதவிக்கரம் நீட்டி வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறப்பு பொதுவாக இருந்தாலும் இவரைப்போன்ற நல்லுள்ளம் கொண்டோர் என்றும் வாழ்வார் எம்மனங்களில்...


 இறுதிச்சடங்கு ஈமக்கிரிகைகள் நிகழ்வானது  மரகதம் கிளினிக்  மூர்வீதி அன்னாரின் இல்லத்தில் இருந்து  இன்று 29-03- 2019 மாலை 3- 30 மணியளவில்
,பொது மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.







b:if cond='data:blog.pageType == "item"'>
மரண அறிவித்தல்..... Reviewed by Author on October 13, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.