அடிப்படைவசதிகள் எதுவும் இன்றி துன்பப்படும் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட சன்னார் கிராமமக்கள்-காணொளி இணைப்பு
மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு உதவி அரச அதிபர் பிரிவுக்கு உட்பட்ட சன்னார் மீள்குடியேற்றக் கிராமத்தில் மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமலேயே வாழ்கின்றார்கள். அடர்ந்த காடுகளுக்குள் மீள் குடியேற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர் என்றும் விலங்குகளால் தாக்கப்படுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்கள்.
மலசல கூட வசதிகள் இல்லை என்றும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகின்றது என்றும் கூறி உள்ளார்கள்.
நோய் வாய்ப்படுபவர்களை வைத்தியசாலையில் உரிய நேரத்தில் சேர்க்கின்றமைக்குக் கூட போக்குவரத்து வசதிகள் கிடையாது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.




அடிப்படைவசதிகள் எதுவும் இன்றி துன்பப்படும் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட சன்னார் கிராமமக்கள்-காணொளி இணைப்பு
Reviewed by NEWMANNAR
on
September 20, 2009
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 20, 2009
Rating:

No comments:
Post a Comment