புரிந்த மொழி... புரியாத வார்த்தை

இலங்கையின் அரச கரும மொழிகளுள் தமிழ் மொழி உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த மொழிக்கு உரிய இடம் வழங்கப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறிதான்.
இங்கு நாம் தந்துள்ள புகைப்படம் இதற்கு நல்லதொரு சான்று.
களனி – கொஹுவளை வீதியில் செல்லும் பஸ் ஒன்றில் தமிழ்ப் பிழையைக் கண்ட எமது செய்தியாளர் அதை உடனடியாக தனது கெமராவுக்குள் அடக்கிக் கொண்டார்.
மொழிதான் ஓர் இனத்தின் அடையாளம். மொழிதான் நாம் நின்று நிலைப்பதற்கான அடிப்படை. ஆக, அந்த மொழி சரியாக உபயோகப்படுத்தப்படும்போது தான் அதன் காத்திரத்தையும் தனித்துவத்தையும் நாம் சரியாகப் பேண முடியும்.
இலங்கையில், சேவையில் ஈடுபடும் பெரும்பாலான பஸ்களில் தமிழ்ப்பிழைகள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றைத் தேசிய போக்குவரத்து அதிகாரசபை அதிகாரிகள் கவனத்திற் கொள்ளவதேயில்லை. தமிழர்கள் அந்த பஸ்களில் பயணிப்பதில்லை என்று நினைத்துக் கொள்கிறார்கள் போலும்.
நன்றி -வீரகேசரி இணையம்
புரிந்த மொழி... புரியாத வார்த்தை
Reviewed by NEWMANNAR
on
September 26, 2009
Rating:

No comments:
Post a Comment