அண்மைய செய்திகள்

recent
-

மீள்குடியேற்றப்படாத கிராம மக்கள் இன்று மன்னாரில் போராட்டம்

மாந்தை எள்ளுப்பிட்டி, பெரிய நாவற்குளம் கிராம மக்களை மீள் குடியமர்த்துமாறு கோரி, மன்னார் அரச செயலகத்திற்கு முன்னால் பல நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்று கூடி இன்று போராட்டம் நடத்தினர். மன்னர் அரசாங்க அதிபருக்கு மகஜர் ஒன்றையும் அவர்கள் கையளித்தனர்.

1990ஆம் ஆண்டு இடம்பெற்ற மோதல்களைத் தொடர்ந்து அப்பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் இடம்பெயர்ந்து, மன்னர் பகுதிகளில் சுமார் 20 வருடங்களுக்கு மேல் வாழ்ந்து வருகின்றனர்.

தற்போது பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். அயலிலுள்ள திருக்கேதீஸ்வரத்திலும் சில ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் மீள்குடியேற்றப்பட்டனர்.

அடம்பன், பாப்பமோட்டை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களும் மீள் குடியேற்றப்பட்டுள்ளனர். எனினும் தாம் இதுவரை மீள்குடியேற்றப்படாமை குறித்தே மேற்படி போராட்ட நடவடிக்கையில் ஈடுபட்டதாக அம்மக்கள் தெரிவித்தனர்
மீள்குடியேற்றப்படாத கிராம மக்கள் இன்று மன்னாரில் போராட்டம் Reviewed by NEWMANNAR on October 07, 2009 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.