மன்னாரில் சட்ட விரோத மணல் அகழ்வை நிறுத்தக் கோரிக்கை

இது தொடர்பாக உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என் அக்கிராம மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறித்த கிராமத்தில் உள்ள முஸ்லிம் குடும்பம் ஒன்று தங்களுடைய காணியை சிங்களவருக்கு விற்றுள்ளனர்.
காணியை இரகசியமாக வாங்கி குறித்த காணியில் சட்ட விரோதமான முறையில் மணலைச் சேமித்து தென் பகுதிக்கு கொண்டு செல்வதற்காண நடவடடிக்கைகள் இடம்பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் கிராம மக்கள் குறித்த காணியை முற்றுகையிட்டு பார்த்த போது அங்கு சுமார் 2000 ரிப்பரில் ஏற்றக்கூடிய மண் குவிக்கப்பட்டதனை கண்டுள்ளனர்.
பின் மன்னார் பொலிஸாருக்கு இது தொடர்பாக முறையிட்டும் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என தெரிவிக்கின்றனர்.
குறித்த கிராமம் கடல் சார்ந்த பகுதியாக காணப்படுவதினால் எதிர்வரும் காலங்களில் கடல் அரிப்பிற்கு கிராமம் உள்ளாகலாம் என கிராம மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.



மன்னாரில் சட்ட விரோத மணல் அகழ்வை நிறுத்தக் கோரிக்கை
Reviewed by NEWMANNAR
on
December 17, 2009
Rating:

No comments:
Post a Comment