மன்னாரில் துறைமுகம்; அமைச்சரவை அங்கீகாரம் : அமைச்சர் றிசாத் தெரிவிப்பு _

இந்தத் துறைமுக அபிவிருத்திக்கென 1000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முசலி பிரதேச செயலகப் பிரிவில் 29 கிராமங்கள் உள்ளன. 20 கிராம அதிகாரி பிரிவுகளும் காணப்படுகின்றன. தற்போது சிலாவத்துறை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள் மீனவத் தொழிலுக்கு மிகவும் பெயர் போன பிரதேசங்களாகும்.
தற்போது 350 மீன் பிடி படகுகள் இங்கு கடற்தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.
முசலி பிரதேச செயலகப் பிரிவில் 13 மீனவ சங்கங்கள் தம்மைப் பதிவு செய்துள்ளதுடன், வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் 110 இயந்திரப்படகுகளும்,350 மீன்பிடி வலைகளும் வழங்கப்பட்டுள்ளன.
மீள்குடியேறும் மீனவ குடும்பங்களுக்கு 9 மாதங்களுக்கான நிவாரணங்களும் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. _
மன்னாரில் துறைமுகம்; அமைச்சரவை அங்கீகாரம் : அமைச்சர் றிசாத் தெரிவிப்பு _
Reviewed by NEWMANNAR
on
January 30, 2010
Rating:

No comments:
Post a Comment