அண்மைய செய்திகள்

recent
-

ஊடகவியலாளர்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை-ஊடகவியலாளர் எஸ்.ஆர்.லெம்பேட்

வடக்கு கிழக்கு மாவட்டங்களில் கடமையாற்றும் ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவதும்  அச்சுருத்தப்படுவதும் தொடர்கதையாகிக் கொண்டிருக்கின்ற நிலையில் ஊடகவியலாளர்கடுiன் பாதுகாப்பை அரசாங்கம் பொருப்பேற்க வேண்டிய நிலைமை தற்போது ஏற்படடுள்ளதாக மன்னார் பிராந்திய ஊடகவியலாளரும் இமன்னார் மாவட்ட மனித உரிமை பாதுகாவலருமான எஸ்.ஆர்.லெம்பேட் தெரிவித்துள்ளார்.
 கடந்த வாரம் மட்டக்களப்பினைச் சேர்ந்த தமிழ் ஊடகவியலாளர் வீட்டில் வைத்து இனம் தெரியாத காடையர்களினால் தாக்கப்பட்டார்.


அதனைத்தொடர்ந்து 4 தினங்களுக்கு முன்பு வவுனியாவைச்சேர்ந்த சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் பொலிஸ் அதிகாரி ஒருவரினால் தாக்கப்பட்டுள்ளார்.

தற்போது மன்னாரில் கடமையாற்றும் தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் காடையர்களினால் தாக்கப்பட்டு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் தற்போது கப்பம் கோருதல்இபோதைப்பொருள் பாவனை இசமுக சீர்கேடுகள் என்பன அதிகரித்துள்ளது.

இவற்றை அதிகாரிகள் எவரும் தங்களின் கவனத்திற்கு கொண்டு வராததன் காரணத்தினாலும் இபொலிஸாரின் அசமந்தப்போக்கின் காரணத்தினாலும் மேற்படி சம்பவம் அதிகரித்து காணப்பட்டது.இந்த நிலையில் மேற்படி மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்கள் மக்கள் விழிப்படைவதற்காக தொடர்ந்தும் செய்திகளை வெளியிடத்தொடங்கினர்.பல பிரச்சினைகளை அம்பலப்படுத்வாiனர்.இதனால் மன்னார் மாவட்டத்தைச்சேர்ந்த சில ஊடகவியலாளர்களை இனம் தெரியாத காடையர் குளுவென்று தொடர்ந்தும் பின் தொடர்ந்து தாக்க முயற்சிசெய்து வருகின்றனர். இந்த நிலையிலேயே மன்னார் உடகவியலாளர் இருவரும் காடையர்களினால் தாக்கப்பட்டார்.

எனவே நாட்டின் முதுகெழும்பு என வர்னிக்கப்படும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பினை உருதிப்படுத்த வேண்டியதன் கடற்பாடு அரசிற்கு உள்ளது என தெரிவித்தார்.


ஊடகவியலாளர்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை-ஊடகவியலாளர் எஸ்.ஆர்.லெம்பேட் Reviewed by NEWMANNAR on December 20, 2010 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.