அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் முருங்கன் கமம் வீதியை புனரமைக்குமாறு கோரிக்கை

மன்னார் முருங்கன் பகுதியில் உள்ள ‘கமம்’ எனும் கிராமத்திற்குச் செல்லும் பிரதான மற்றும் உள்ளக வீதிகள் கடந்த பல வருடங்களுக்கு மேலாக புனரமைப்பு செய்யப்படாமல் காணப்படுவதினால் அப்பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் போக்குவரத்தினை மேற்கொள்வதில் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக அம்மக்கள் தெரிவிக்கின்றனர். 


விசாயிகள்இபாடசாலை மாணவர்களஇஅதிகாரிகள் என நாடுயயந்தம் நூற்றுக்கயேக்கானோர் குறித்த வீதியினால் பயனங்களை மேற்கொண்டு வருகின்றனர்.குறிப்பாக பாடசாலை மாணவர்கள் பயணங்களைத் தொடர முடியாதிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

முருங்கன் கமம் வீதியானது சிலாபத்துரை பிரதான வீதியுடன் இணைக்கப்படும் முக்கியமான வீதியாக காணப்படுகின்றது.மேற்படி வீதி செம்மண்ணினால் (கிரவல்) அமைக்கப்பட்டுள்ளமையினால் தற்போது பெய்து வரும் மழை காரணமாக மண் நீரில் கரைந்து காணப்படுகின்றது.எனவே குறித்த வீதியை புனரமைத்து தருமாறு கிராம மக்கள் உரிய அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் நிருபர்

மன்னார் முருங்கன் கமம் வீதியை புனரமைக்குமாறு கோரிக்கை Reviewed by NEWMANNAR on December 22, 2010 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.