அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட மீனவர்கள் பாஸ் நடைமுறையினால் தொடர்ந்தும் அசௌகரியம் _

மன்னார் மாவட்டத்தில் கடலுக்குச் செல்லும் மீனவர்கள் கடற்படையினரால் நடைமுறைப்பட்டுள்ள பாஸ் நடைமுறையினால் மீனவர்கள் தொடர்ந்து பல அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.

இது தொடர்பாக மீனவர்கள் தெரிவிக்கையில், தொழிலுக்குச் செல்வதற்கு கடற்படையினர் பல நிபந்தனைகளை விதித்துள்ளனர்.

கடற்படையினரால் வழங்கப்படும் விண்ணப்பப்படிவத்தை நிரப்பி 10 அதிகாரிகளினால் கையொப்பமிடப்பட்டு உறுதிபடுத்தப்பட வேண்டும். அதன்பின் கடற்படையினர்; அடையாள அட்டையினை வழங்குவார்கள். அதன் பின்னர்தான் கடலுக்கு செல்ல முடியும்.

இவ் அடையாள அட்டையினைப் பெற சுமார் 2 மாதங்கள் செல்லும். கடந்த வருடம் வழங்கப்பட்ட கடற்தொழில் பாஸ் காலாவதியாகிவிட்ட நிலையில் மீண்டும் பாஸ் பெறவேண்டும் என மீனவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். __
மன்னார் மாவட்ட மீனவர்கள் பாஸ் நடைமுறையினால் தொடர்ந்தும் அசௌகரியம் _ Reviewed by NEWMANNAR on February 01, 2011 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.