மன்னார்க் குடாவில் இரு சிறிய தீவுகள் கடலுக்குள் மூழ்கின: முருங்கைக் கற்கள் அகழ்வுகள் தீவுகளின் அமைவிடங்களுக்கு அச்சுறுத்தல் எனவும் தெரிவிப்பு
இந்தியா மற்றும் இலங்கைக்கிடையிலான மன்னார் குடாவில் அமைந்துள்ள இரண்டு சிறிய தீவுகள் கடலுக்குள் மூழ்கியுள்ளதாக பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆய்வொன்றை மேற்கோட்காட்டி செய்திவெளியிட்டுள்ளது.
கடல் மாசடைதல் மற்றும் புவி வெப்பமடைதல் போன்றன காரணமாக கடல் நீரின் மட்டம் உயர்ந்து செல்வதனால் இவ்வாறான நிலைமைகள் ஏற்படுகின்றன.மன்னார் குடாவில் சமுத்திர பூங்காவுக்கு உரித்தான 21 தீவுகள் அந்த பிராந்தியத்தில் அமைந்துள்ளன.அந்த பிராந்தியம் உலகின் சமுத்திர உயிரினங்கள் அதிகமாக உள்ள பிராந்தியமாக கருதப்படுகிறது.
சட்டவிரோதமான முறையில் அங்கு மேற்கொள்ளப்படுகின்ற முருங்கைக் கற்கள் அகழ்வுகள் தீவுகளின் அமைவிடங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக பிரித்தானிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Tailor-Made Bride, A
மன்னார்க் குடாவில் இரு சிறிய தீவுகள் கடலுக்குள் மூழ்கின: முருங்கைக் கற்கள் அகழ்வுகள் தீவுகளின் அமைவிடங்களுக்கு அச்சுறுத்தல் எனவும் தெரிவிப்பு
Reviewed by NEWMANNAR
on
May 16, 2011
Rating:
Reviewed by NEWMANNAR
on
May 16, 2011
Rating:

No comments:
Post a Comment