நிறுவனங்கள் ஒன்றிணைத்து செயற்படுவது தொடர்பான கலந்துரையாடல்
தொடர்பாக பணியாற்றும் நிறுவனங்களை ஒன்றிணைத்து செயற்படுவது தொடர்பான கலந்துரையாடல் (141-10-2011)வெள்ளிக்கிழமை சேவாலங்கா மன்றத்தின் வவுனியா அலுவலகத்தில் இடம் பெற்றது.
இவ் ஒன்று கூடலுக்கு தலைமை தாங்கிய சேவாலங்கா மன்றத்தின் உத்தியோகஸ்தர் அறிவரசன் இங்கு கருத்து தெரிவிக்கையில்,
வவுனியா மாவட்டத்தில் சமூக உள நல பணிகளை முன்னெடுக்கும் நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயற்படுகின்றது.அதே போல் சிறுவர்கள் தொடர்பிலும்,பால் நிலை தொடர்பான அடிப்படையில் பணியாற்றும் நிறுவனங்களுக்கு இடையிலும் அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
அதே போல சட்ட ஆவணங்கள் பெற்றுக் கொடுக்கும் மற்றும் சட்ட உதவிகளை வழங்கும் ஓர் அமைப்பினை வவுனியாவில் உருவாக்கி கொண்டால் அது பலம் மிக்கதாகவும் மக்களுக்கு இணைந்து பணியாற்ற வல்லதாகவும் இருக்கும் என தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலுக்கு சேவா லங்கா மன்றம்,இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு,மனித உரிமைகள் இல்லம்,டெனிஸ் அகதிகள்
பேரவை ஒபர் ஸ்ரீலங்கா போன்ற நிறுவனங்கள் பங்கு பற்றி இருந்தன.
நிறுவனங்கள் ஒன்றிணைத்து செயற்படுவது தொடர்பான கலந்துரையாடல்
Reviewed by NEWMANNAR
on
October 11, 2011
Rating:

No comments:
Post a Comment