மன்னாரில் டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்
மன்னார் மாவட்டத்தில் தொடர் மழையினையடுத்து டெங்கு நுளம்புகளின் பரவல் அதிகரித்துள்ளதனால் இதன் பரவலைக் கட்டுப்படுத்தும் முகமாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணி மனையின் கீழ் செயற்படும் மலேரியா தடை இயக்கம் மாவட்டத்தின் சகல கிராமங்களிலும் புகையூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினைத் தொடர்ந்து மாவட்டத்தின் சகல பாகங்களிலும் மழை நீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக டெங்கு நுளம்புகளின் பெருக்கமும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்தும் முகமாக மாவட்டத்தின் சகல கிராமங்களிலும் மலேரியா தடை இயக்கத்தினர் இன்று முதல் புகையூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெங்குக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட 25 பேர் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது
மன்னாரில் டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்
Reviewed by NEWMANNAR
on
November 05, 2011
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 05, 2011
Rating:

No comments:
Post a Comment