சன்னார் கிராமத்தில் வெடி பொருட்கள் மீட்பு

சன்னார் கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதியில் மரம் ஒன்றிற்கு அருகாமையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 48 நிலக்கண்ணி வெடிகளையும் 36 மூடிகளையும் விடத்தல்தீவு விசேட பொலிஸ் பிரிவினர் மீட்டுள்ளனர்.
சன்னார் கிராம மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் இன்று வெள்ளிக்கிழமை காலை 11.40 மணியளவில் குறித்த காட்டுப்பகுதிக்குச் சென்ற பொலிஸார் குறித்த பகுதியின் மரத்திற்கு அருகாமையில் புதைத்து வைத்திருந்த குறித்த 48 நிலக்கண்ணி வெடிகளையும் 36 மூடிகளையும் மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட நிலக்கண்ணி வெடிகளை பொலிஸார் இராணுவத்திடம் ஒப்படைத்துள்ளனர்.
சன்னார் கிராமத்தில் வெடி பொருட்கள் மீட்பு
Reviewed by Admin
on
November 05, 2011
Rating:

No comments:
Post a Comment