அண்மைய செய்திகள்

recent
-

கடந்த வருடம் சாதாரண தர பரீட்சையில் 9A சித்திகளை பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு


கடந்த வருடம் இடம் பெற்ற க.பொ.த (சா.த)-2011 பரிட்சையில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் 9ஏ அதி விசேட சித்தி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
-தமிழ் மொழி மூலம் தோற்றிய மாணவர்களில் இருவரும்,ஆங்கில மொழி மூலம் பரிட்சைக்குத் தோற்றிய இருவரும் இவ்வாறு அதி விசேட சித்தியை பெற்றுள்ளனர்.

குறித்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வெண்று 11-04- புதன் கிழமை காலை மன்னார் வலயக்கல்விப்பணிமனையின் மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் தலைமையில் இடம் பெற்றது.

இதன் போது தமிழ் மொழி மூலம் பரிட்சைக்குத்தோற்றிய மன்-பற்றிமா ம.ம.வி மாணவன் வை.ஆர்.சிகான் குரூஸ்,மன்-அல்மினா ம.வி மாணவி எம்.ஏ.நிபாயா,மற்றும் ஆங்கில மொழி மூலம் பரிட்சைக்குத் தோற்றிய மன்-புனித சவேரியார் பெண்கள் தேசிய கல்லூரி மாணவி ஞானதாஸ் மேரி சுரேஸ்கா,மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவன் ஜெரோம் எமில் றொசிங்டன் ஆகிய 4 மாணவர்களும் 9ஏ அதி விசேட சித்தியை பெற்றுள்ளனர். இதன் போது குறித்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

குறித்த கௌரவிப்பு நிகழ்வின் போது மன்னார் வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.


கடந்த வருடம் சாதாரண தர பரீட்சையில் 9A சித்திகளை பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு Reviewed by NEWMANNAR on April 15, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.