மன்னாரில் பாரிய குழாய் நீர் வேலைத்திட்டம் ஆரம்பம்
முருங்கனில் இருந்து மன்னார் வரை 3200 மில்லியன் ரூபா செலவில் பாரிய குழாய் நீர் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு இடம் பெற்று வருகின்றது.
குறித்த வேலைத்திட்டம் முருங்கன்,வங்காலை,திருக்கேதீஸ்வரம்,மன்னார் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
குறித்த வேலைத்திட்டத்திற்கு 160மி.மீ,280மி.மீ,400 மில்லி மீற்றர் விட்டங்களைக் கொண்ட குழாய்கள் பயன்படுத்தப்படுகின்றன.
தற்போது மன்னாரில் 2500 கன மீற்றர் தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வருகின்றது.
குறித்த வேலைத்திட்டம் முடிவடைந்த பின் 8500 கன மீற்றர் நீர் வழங்க முடியும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
குறித்த வேலைத்திட்டத்திற்கு இலங்கை அரசும்,உலக வங்கியும் இணைந்து 3200 மில்லியன் ரூபாவினை ஒதுக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. ___முருங்கனில் இருந்து மன்னார் வரை 3200 மில்லியன் ரூபா செலவில் பாரிய குழாய் நீர் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு இடம் பெற்று வருகின்றது.
குறித்த வேலைத்திட்டம் முருங்கன்,வங்காலை,திருக்கேதீஸ்வரம்,மன்னார் ஊடக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
குறித்த வேலைத்திட்டத்திற்கு 160மி.மீ,280மி.மீ,400 மில்லி மீற்றர் விட்டங்களைக் கொண்ட குழாய்கள் பயன்படுத்தப்படுகின்றன.
தற்போது மன்னாரில் 2500 கன மீற்றர் தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வருகின்றது.
குறித்த வேலைத்திட்டம் முடிவடைந்த பின் 8500 கன மீற்றர் நீர் வழங்க முடியும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
குறித்த வேலைத்திட்டத்திற்கு இலங்கை அரசும்,உலக வங்கியும் இணைந்து 3200 மில்லியன் ரூபாவினை ஒதுக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் பாரிய குழாய் நீர் வேலைத்திட்டம் ஆரம்பம்
Reviewed by Admin
on
June 29, 2012
Rating:

No comments:
Post a Comment