அண்மைய செய்திகள்

recent
-

அனர்த்த நிலையை கட்டுப்படுத்தும் முதற்கட்ட பணிகள் ஆரம்பிப்பு

மன்னார் மாவட்டத்தில் அனர்த்த நிலையை கட்டுப்படுத்துவதற்கான முதற்கட்ட வேளைத்திட்டம் நேற்று புதன்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சு, அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஆகியவை இணைந்து நடைமுறைப்படுத்தும் கிராம அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் குறித்த செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.



கொழும்பில் இருந்து வருகை தந்துள்ள பொறியியளாலர் குழுவினரினால் கிராம மக்களின் உதவியுடன் இவ் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மன்னார் உப்புக்குளம் தெற்கு, எமிழ் நகர், பள்ளிமுனை, துள்ளுக்குடியிறுப்பு, வங்காலைகிழக்கு, மேற்கு, தோமஸ்புரி, சிலாபத்துறை, மருத மடு, மழுவராஜன் கட்டையடம்பன் போன்ற கிராமங்களில் முதற்கட்ட ஆய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

எதிர்வரும் மழைக்காலங்களின் போது வெள்ள அனார்த்தத்தை கட்டுப்படுத்தும் நோக்கமாகவும் இப்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அனர்த்த நிலையை கட்டுப்படுத்தும் முதற்கட்ட பணிகள் ஆரம்பிப்பு Reviewed by NEWMANNAR on June 08, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.