அண்மைய செய்திகள்

recent
-

வெள்ளாங்குளம் பிரதேசத்திலுள்ள கணேசபுரம் பகுதியில் இந்திய அரசின் வீடுகள் கையளிப்பு

 மன்னார் மாவட்ட வெள்ளாங்குளம் பிரதேசத்திலுள்ள கணேசபுரம் பகுதியில் இந்திய அரசின் நிதியுதவியுடன் நிர்மானிக்கப்பட்ட 53 வீடுகள் பயனாளிகளிடம் கடந்த 20 ஆம் திகதி கையளிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் பிரதம அதீதியாக இந்திய கலாச்சார, வீடமைப்பு மற்றும் வறுமை ஒழிப்பு அமைச்சர் குமாரி செல்ஜா கலந்துகொண்டு பயனாளிகளுக்கான வீடுகளுக்கான பத்திரங்களை கையளித்தார்.

குறித்த பகுதியில் இதுரை 1,000 வீடுகள் நிர்மானிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 619 வீடுகள் இதுவரை பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்தா, யாழ். இந்திய துணை உயர் ஸ்தானிகர் மகாலிங்கம், இந்திய கலாசார அமைச்சின் மேலதிக செயலாளர் ரவீந்திரசிங் மற்றும் இந்திய தொல்பொருள் ஆய்வுமைய பணிப்பாளர் கௌதம் குப்தா ஆகியோர் கலந்துகொண்டனர்.
வெள்ளாங்குளம் பிரதேசத்திலுள்ள கணேசபுரம் பகுதியில் இந்திய அரசின் வீடுகள் கையளிப்பு Reviewed by NEWMANNAR on August 24, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.