திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டத்தின் இறுதி முடிவுகள்!- தமிழரசுக்கட்சிக்கு அதிகப்படியான வாக்குகள்!
மட்டக்களப்பு மாவட்டத்தின் இறுதி முடிவுகளின்படி தமிழரசுக்கட்சி மூன்று தொகுதிகளிலும் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்று முன்னணியில் உள்ளது.
இதன்படி தமிழரசுக்கட்சி பட்டிருப்பு, மட்டக்களப்பு ஆகிய இரு தொகுதிகளிலும் கல்குடா தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் வெற்றியீட்டியுள்ளன.
மூன்று தொகுதிகளிலும் ஒவ்வொரு கட்சிக்கும் கிடைக்கப்பெற்ற மொத்த வாக்குகள்:
தமிழரசுக்கட்சி: 101,444
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு: 61762
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்: 22640
ஐக்கிய தேசியக் கட்சி: 2371
திருகோணமலை மாவட்டத்தின் இறுதி முடிவுகள்!- தமிழரசுக்கட்சிக்கு கூடுதல் வாக்குகள்
திருகோணமலை மாவட்டத்தின் மூன்று தேர்தல் தொகுதிகளிலும் கிடைக்கப்பெற்ற வாக்குகளின் அடிப்டையில் தமிழரசுக்கட்சிக்கே கூடுதல் வாக்குகள் கிடைத்துள்ளன.
இதனடிப்படையில் திருகோணமலை தொகுதியில் தமிழரசுக் கட்சியும், மூதூர் தொகுதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்சும், சேருவில தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் வெற்றிபெற்றுள்ளன.
மூன்று தொகுதிகளிலும் ஒவ்வொரு கட்சியும் பெற்றுள்ள மொத்த வாக்குகள்:
தமிழரசுக் கட்சி: 43294
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு: 38745
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்: 25649
ஐக்கிய தேசியக் கட்சி: 22645
திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டத்தின் இறுதி முடிவுகள்!- தமிழரசுக்கட்சிக்கு அதிகப்படியான வாக்குகள்!
Reviewed by NEWMANNAR
on
September 09, 2012
Rating:

No comments:
Post a Comment