அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் கோழி திருடி விற்பனை செய்த 6 இளைஞர்கள் கைதாகி விளக்கமறியலில்.


மன்னார் பணங்கட்டுக்கொட்டு பகுதியில் வீட்டில் வளர்க்கப்பட்ட கோழிகளை திருடி விற்பனை செய்துவந்த  6 இளைஞர்களை நேற்று ஞாயிற்றுக்கிழமை மன்னார் பொலிஸார் கைது செய்து இன்று திங்கட்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது குறித்த 6 இளைஞர்களையும் இம்மாதம் 17 ஆம் திகதி வரை(17-09-2012) விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட நீதவான் ஏ.யூட்சன் உத்தரவிட்டார்.
-மன்னார் பணங்கட்டுக்கொட்டு பகுதியில் உள்ள இரண்டு வீடுகளில் அதே கிராமத்தைச் சேர்ந்த 6 இளைஞர்கள் கோழித்திருட்டில் ஈடுபட்டு வந்தனர்.
இதன் போது குறித்த இரண்டு வீடுகளிலும் களவாடப்பட்ட 21 கோழிகளையும் குறித்த 6 இளைஞர்களும் நேற்று ஞாயிற்றுக்கிழமை உப்புக்குளம் மற்றும் கோந்தைப்பிட்டி ஆகிய இடங்களில் விற்பனை செய்து வந்தனர்.
இதன் போது மன்னார் பொலிஸார் குறித்த 6 இளைஞர்களையும் கைது செய்ததோடு குறித்த கோழிகளும் கைப்பற்றப்பட்டது.
இந்த நிலையிலே குறித்த சந்தேக நபர்கள் இன்று திங்கட்கிழமை மன்னார் மாவட்ட நீதவான் ஏ.யூட்சன் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
மன்னாரில் கோழி திருடி விற்பனை செய்த 6 இளைஞர்கள் கைதாகி விளக்கமறியலில். Reviewed by NEWMANNAR on September 03, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.