மன்னார் முருங்கனில் நாட்டுக்கூத்து நாடகம் அரங்கேற்றம்-கலைஞர்களும் கௌரவிப்பு.
மன்னார் முருங்கன் தூய இயாகப்பர் ஆலய சபையினரால் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 7 மணியளவில் தூய சில்வேஸ்திரியார் வாசாப்பு (நாட்டுக்கூத்து நாடகம்) முருங்கனில் இடம் பெற்றது.
முருங்கன் பங்குத்தந்தை தலைமையில் இடம் பெற்ற இந்த நாட்டுக்கூத்து நாடகத்தை அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளாரின் தந்தையான முருங்கன் தூய இயாகப்பர் ஆலயத்தைச் சேர்ந்த அமரர் புலவர் சந்தான் பாவிலு அவர்கள் எழுதியுள்ளார்.
-குறித்த நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் கலந்து கொண்டார்.
-அருட்திரு.தமிழ் நேசன் அடிகளார் தலைமையில் இடம் பெற்ற கலைஞர் கௌரவிப்பு நிகழ்வில் உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 6 கலைஞர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
(மன்னார் நிருபர் )
மன்னார் முருங்கனில் நாட்டுக்கூத்து நாடகம் அரங்கேற்றம்-கலைஞர்களும் கௌரவிப்பு.
Reviewed by NEWMANNAR
on
September 05, 2012
Rating:

No comments:
Post a Comment