அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் உள்ள பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்கள் அசௌகரியத்தை எதிர் நோக்கும் நிலை.

மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் உள்ள பிரதான வீதிகளுக்கு முன் உள்ள பாடசாலைகளுக்கு செல்வதற்கான வீதிக்கடவைகள் மற்றும் ஏனைய பாதுகாப்பு குறியீடுகள் இல்லாததன் காரணத்தினால் மாணவர்கள் குறித்த வீதியைக்கடந்து பாடசாலைகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பெற்றோரும்,மாணவர்களும் விசனம் தெரிவித்துள்ளனர்.


மன்னார்-மதவாச்சி பிரதான வீதியில் வாகன போக்குவரத்துக்கள் அதிகரித்த நிலையில் உள்ளது.இதனால் குறித்த வீதியில் உள்ள உயிலங்குளம் மற்றும் முருங்கன் ஆகிய பாடசாலைகளுக்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரதான வீதியூடாக நடந்தும்,துவிச்சக்கர வண்டிகளிலும் செல்லுகின்றனர்.

எனினும் குறித்த மாணவர்கள் வீதியை விட்டு கடந்து பாடசாலையினுள் செல்வதற்கும்,பாடசாலை முடிந்து வீதியைக்கடந்து வீடு செல்வதற்கும் பல மணி நேரம் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வீதியில் மஞ்சள்  கோட்டு கடவை மற்றும் வீதி போக்குவரத்துப்பிரிவு பொலிஸாரின் பாதுகாப்பு நடவடிக்கை எவையும் அங்கு இல்லாத நிலை காணப்படுகின்றது.
இதனால் விபத்துக்களும் ஏறபடுகின்றது.

எனவே மன்னார் நகரில் உள்ள பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் முன்னரும்,முடிவடைகின்ற போதும் மன்னார் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த வீதிப்போக்கு வரத்துப்பிரிவு பொலிஸார் மிகவும் அர்ப்பணிப்புடன் பாடசாலைகளுக்கு முன் நின்று குறித்த சேவையினை செய்து வருகின்றனர்.

குறித்த சேவைகள் போன்று குறித்த பகுதிக்கு பொறுப்பான முருங்கன் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த வீதி போக்குவரத்துப்பிரிவு பொலிஸார் செயற்பட வேண்டும் என மாணவர்களும்,பெற்றோரும் வேண்டு கோள் விடுக்கின்றனர்.

மன்னார் நகர நிருபர்



மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் உள்ள பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்கள் அசௌகரியத்தை எதிர் நோக்கும் நிலை. Reviewed by NEWMANNAR on September 16, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.