திருமலையில் இருந்து மன்னார் சென்ற பஸ் விபத்துக்குள்ளானது
திருகோணமலைக்கும் மன்னாருக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் பேரூந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியதில், பேரூந்தில் பயணித்த 40 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று கெபத்திகொலாவ – பதவிய வீதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் படுகாயமடைந்தவர்கள் கெபத்திகொலாவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுப நிகழ்வொன்றிக்காக பேரூந்தில் பயணித்த 40 பேரே காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதிக மழை காரணமாக பேரூந்து சாரதியினால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரமுடியாத வேளை, பேரூந்து வழுக்கிச் சென்று சரிந்ததனால் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.
திருகோணமலையைச் சேர்ந்தவர்கள் மன்னாரில் சுப நிகழ்வொன்றிற்காகச் செல்லும் போது இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று கெபத்திகொலாவ – பதவிய வீதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் படுகாயமடைந்தவர்கள் கெபத்திகொலாவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுப நிகழ்வொன்றிக்காக பேரூந்தில் பயணித்த 40 பேரே காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதிக மழை காரணமாக பேரூந்து சாரதியினால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரமுடியாத வேளை, பேரூந்து வழுக்கிச் சென்று சரிந்ததனால் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.
திருகோணமலையைச் சேர்ந்தவர்கள் மன்னாரில் சுப நிகழ்வொன்றிற்காகச் செல்லும் போது இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.
திருமலையில் இருந்து மன்னார் சென்ற பஸ் விபத்துக்குள்ளானது
Reviewed by NEWMANNAR
on
October 29, 2012
Rating:
.jpg)
No comments:
Post a Comment