அண்மைய செய்திகள்

recent
-

பராமறிப்பற்ற நிலையில் பயணிகள் தரிப்பிடம்-பராமரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்கள் கோரிக்கை


மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் உள்ள பயணிகள் தரிப்பிடங்கள் அனைத்தும் உரிய முறையில் பராமரிக்கப்படாமையினால் குறித்த தரிப்பிடங்களினுள் மக்கள் இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் உள்ள உயிலங்குளம்,நொச்சிக்குளம்,முருங்கன் அகிய கிராமங்களில்  பயணிகள் தரிப்பிடங்கள் காணப்படுகின்றது.
குறித்த தரிப்பிடங்கள் உரிய முறையில் பராமரிக்காத நிலையில் காணப்படுகின்றது.


இதனால் பஸ்ஸிற்காக காத்து நிற்கும் மக்கள் பயணிகள் தரிப்பிடத்தினுள் இருக்காது வெளியில் நீண்ட நேரம் வெயிலில் காத்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சிறுவர்கள்,வயோதிபர்கள்,கர்ப்பினித்தாய்மார் உற்பட அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே உரிய அதிகாரிகள் இவ்விடையத்தில் தலையிட்டு குறித்த பயணிகள் தரிப்பிடத்தை பராமரிப்பதற்கான  நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மன்னார் இணையம் ஊடாக மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மன்னார் இணையத்தள  நிருபர்,

பராமறிப்பற்ற நிலையில் பயணிகள் தரிப்பிடம்-பராமரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்கள் கோரிக்கை Reviewed by NEWMANNAR on October 06, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.