அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் அஞ்சல் அலுவலகத்தில் உள்ள பணியாளர்கள் பலருக்கு தகுதிகள் இருந்தும் நிரந்தர நியமனம் வழங்குவதில் இழுத்தடிப்பு.


மன்னார் தபால் அலுவலகம் மற்றும் உப தபால் அலுவலகங்களில் நீண்ட வருடங்களாக பணியாற்றும் பல பணியாளர்களுக்கு இது வரை நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை என பாதீக்கப்பட்ட பணியாளர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

மன்னார் தபால் அலுவலகம் மற்றும் உப தபால் அலுவலகங்களில் பணி புரியும் பதிவு பட்ட பதிலாளர்களாக 7 பேர் கடந்த 6 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி வருகின்றனர்.

இவர்கள் தமது நிரந்தர நியமனம் தொடர்பில் அங்குள்ள அதிகாரிகளிடமும்,உயர் அதிகாரிகளிடமும் பல தடவை எடுத்துக்கூறிய நிலையில் அவர்களின் கவனத்திற்கும் பல தடவை கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால் அவர்களுடைய நிரந்தர நியமனம் தொடர்பில் அதிகாரிகள் எவரும் இது வரை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் அணைவரும் நியமனம் பெறுவதற்கான தகுதிகள் அணைத்தும உள்ள போதும் நிரந்தர நியமனம் வழங்கப்படாது இருப்பதாக பாதீக்கப்பட்ட சில பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எமது நிரந்தர நியமனம் தொடர்பில் மன்னார் தபால் அலுவலகத்தின் சில மேல் அதிகாரிகள் தொடர்ந்தும் அசமந்தப்போக்குடன் செயற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விடையம் தொடர்பாக மன்னார் பிரதம அஞ்சல் அலுவலகரை தொடர்பு கொண்ட போதும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
மன்னார் அஞ்சல் அலுவலகத்தில் உள்ள பணியாளர்கள் பலருக்கு தகுதிகள் இருந்தும் நிரந்தர நியமனம் வழங்குவதில் இழுத்தடிப்பு. Reviewed by NEWMANNAR on November 30, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.