தேசத்துக்கு நிழல்'மன்னாரிலும் ஆரம்பித்து வைப்பு-பட இணைப்பு.,
தேசத்துக்கு நிழல்' (தெயட்ட செவன) தேசிய மர நடுகை வேலைத்திட்டம் வியாழக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பத்தரமுல்லையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
ஜனாதிபதியின் பிறந்த தினத்தையும் ஜனாதிபதியின் பதவிப்பிரமாண தினத்தையும் நினைவு கூறுமுகமாக இந்த தேசிய மர நடுகை வேலைத்திட்டத்தைச் செயல்படுத்துமாறு சுற்றாடல் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா விடுத்த பணிப்புரையின் பேரிலேயே இவ்வேலைத்திட்டம் முன்னேடுக்கப்படுகின்றது.
இந்த நிலையில் குறித்த வேளைத்திட்டம் மன்னார் மாவட்டத்திலும் நேற்று வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.இதன் போது தேசிய இளைஞர்சேவைகள் மன்றத்தின் மாகான பனிப்பாளர் என்.எம்.முனவ்பர் அவர்களின் தலைமையிலும்,இராணுவத்தின் 54 ஆவது படைப்பிரிவு அதிகாரியின் தலைமையிலும் மரம் நாட்டும் நிகழ்வுகள் இடம் பெற்றது
தேசத்துக்கு நிழல்'மன்னாரிலும் ஆரம்பித்து வைப்பு-பட இணைப்பு.,
Reviewed by NEWMANNAR
on
November 17, 2012
Rating:
No comments:
Post a Comment