அண்மைய செய்திகள்

recent
-

அடம்பனில் சிறுகதை நூல் வெளியீட்டு விழா


மன்னார் அடம்பன் பிரதேசத்தைச் சேர்ந்த செல்வி வே. சந்திரகலா (வெற்றிச் செல்வி) அவர்களின் 'முடியாத ஏக்கங்கள்' என்ற சிறுகதைத் தொகுதி நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் டிசம்பர் 1ஆம் திகதி பகல் 2.00 மணிக்கு அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.



  இந்நிகழ்வில் மன்னார் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும், கலையருவி நிறுவனத்தின் இயக்குனருமாகிய அருட்திரு தமிழ் நேசன் அடிகளார் பிரதம விருந்தினராகக் கலந்துகொள்கிறார். மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவு சமூகசேவை உத்தியோகத்தர் திரு. த. தனசீலன் அவர்கள் நிகழ்விற்கு தலைமை வகிக்கின்றார். இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் திரு. மா. சிறிஸ் கந்தகுமார், மாந்தை மேற்கு பிரதேசசபை தவிசாளர் திரு. சு. வரப்பிரகாசம், ஊடகவியலாளர் திரு. பொ. மாணிக்கவாசகம் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். கௌரவ விருந்தினர்களாக மடு வலய தமிழ் உதவிக்கல்விப்பணிப்பாளர் செல்வி வல்லிபுரம் நாகம்மா, அடம்பன் பங்குத்தந்தை அருட்திரு. லக்கோன்ஸ் பிகிராடோ, மன்னார் பிரஜைகள் குழுத் தலைவர் அருட்திரு. இ. செபமாலை, அடம்பன் மத்திய மகா வித்தியாலய அதிபர் திரு. ம. கிறிஸ்ரியான் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
  நூல் மதிப்பீட்டுரையை இ. அபிகைபாலன் அவர்களும்;, நூல் நயம்புரையை தமிழ் ஆசிரியை திருமதி பரமேஸ்வரி சிலுவேஸ்திரன் அவர்களும் நிகழ்த்துகின்றனர். மன்னார் மாற்றுத் திறனாளிகள் அமைப்பான தேனீ நிறுவனத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அடம்பனில் சிறுகதை நூல் வெளியீட்டு விழா Reviewed by NEWMANNAR on November 30, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.