அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரிற்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் விஜயம்.

மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக ஏற்பட்டுள்ள பதிப்புக்கள் குறித்தும் உடன் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராயும் விசேட கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 2.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமர வீர தலைமையில் இடம் பெற்றது.


 இதன் போது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹீனைஸ் பாரூக்,மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சரத் ரவீந்திர, பிரதேசச் செயலாளர்கள்,திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 இதன் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கான  உணவு வசதிகள்,சுகாதாரம்,மருத்துவம் ஆகியவற்றை உடனுக்குடன் வழங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்களை நேரில் சென்று பார்வையிட்டதோடு அந்த மக்களுக்கு தேவையான தேவைகளை கேட்டறிந்தார்
மன்னாரிற்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் விஜயம். Reviewed by NEWMANNAR on December 31, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.