அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் எழுத்தை உடனடியாக இரண்டாவதாக மாற்றுமாறு உத்தரவிட்ட ஆளுநர்

மடு வலயக் கல்விப் பணிமனையின் பெயர் பலகைகளில் முதலாவதாக தமிழ் எழுத்து எழுதப்படிருந்ததினால் உடனடியாக அதனை மாற்றுமாறு ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி உத்தரவிட்டுள்ளார்.


அதற்கமைய அப் பெயர்பலகை உடனடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மடுவலயக் கல்விப் பணிமனையின் பெயர் பலகையில் “மடுவலய கல்விப்பணிமனை” என்ற பெயர் பலகை மூன்று மொழிகளிலும் எழுத்தப்பட்டுள்ளது. இந்த பெயர் பலகையில் முன்னர் முதலாவது தமிழ் மொழியும், இரண்டாவது சிங்கள மொழியிலும் எழுதப்பட்டிருந்தது.

 உடனடியாக இந்த பெயர் பலகையை மாற்றியமைத்து சிங்கள மொழி முதலில் அமையுமாறு ஆளுனர் உத்தரவிட்டுள்ளார். அதற்க மைய முன்னர் எழுதப்பட்டிருந்த பெயர் பலகையில் மேல் ஸ்ரிக்கர் கொண்டு தமிழ் மறைக்கப்பட்டு சிங்கள எழுத்து அதன்மேல் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
தமிழ் எழுத்தை உடனடியாக இரண்டாவதாக மாற்றுமாறு உத்தரவிட்ட ஆளுநர் Reviewed by Admin on January 27, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.