அண்மைய செய்திகள்

recent
-

ஹலால் சான்றிதழ் வழங்கும் அதிகாரம் விரைவில் அரசிடம்?


ஹலால் சான்றிதழ் வழங்கும் அதிகாரம் விரைவில் அரச நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைக்க உள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் இன்று மாலை நேரம் உத்தியோகபூர்வமாக தெரியவரலாம் என அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையினை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை வாபஸ் பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஹலால் சான்றிதழை உலமா சபையிடம் இருந்து மீளப்பெற்று அதனை அரச நிறுவனம் ஒன்றினூடாக வழங்க அரசு தீர்மானித்து விட்டதாக தகவல்கள் வெளியான நிலையிலேயே மேற்படி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

இதேவேளை ஜம்இய்யதுல் உலமா சபையின் உறுப்பினர்கள் தற்போது இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
ஹலால் சான்றிதழ் வழங்கும் அதிகாரம் விரைவில் அரசிடம்? Reviewed by NEWMANNAR on February 26, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.